Friday 26 June 2015

என்னால்  இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..???

இந்த கேள்வியை உங்கள் மனசாட்சி உங்களிடம் அநேக தடவை கேட்டிருக்கும் ...அதற்கான விடையாக இந்த பதிவு அமையக்கூடும்.. நீங்களும் படியுங்கள்,,கண்டிப்பாக மறக்காமல் SHARE செய்யுங்கள்...இதை படித்து முடிந்தவுடன் நீங்கள் செய்த தவறை நீங்களே சரி பார்க்க உதவியாகவும் ,அதன் பின் இந்த தொழிலில் நீங்கள் இருப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவும் உங்களால் முடியும்..


பங்கு சந்தை ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1.5 இலட்சம் கோடி வணிகம் நடக்கும் ..இடம்.இது ஒரு மிக பெரிய தொழில்...இந்த தொழிலில் 100 க்கு 99 பேர் பணத்தை இழந்து ..மிக ஒரு சிலரே அந்த மொத்த பணத்தை சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர் ..


இந்த தொழிலில் ஒவ்வொருவரும் நுழைவது  நண்பர்கள் சொன்னார்கள் அவர் சொன்னார் இவர் சொன்னார்,என்று ACCOUNT OPEN செய்து தொழிலில் நுழையும் போது   முதலீடு செய்வது என்னவோ 10000-50000 மட்டுமே...ஆரம்ப காலத்தில் எதிர்பார்ப்பதும் தினசரி 500 கிடைத்தால் போதும்..1000 கிடைத்தால் போதும் என்று தான் உள்ளே வருகின்றனர்...தினசரி வணிகத்தில் அவர்கள் எதிர்பார்த்த 300-500-1000 என ஒரு சில நாட்கள் கிடைக்கும் அதே போல 500-1000 என இழப்பும் வரும்..அதையெல்லாம் தாண்டி அடுத்து அவர்கள் செய்யும் தவறு  இலக்கில்லாமல் கணினி முன் வந்து அமருவது...


அதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..காலையில் வந்து அமர்ந்தவுடன்

முதல் 2-3 வியாபாரத்தில் ஒரு 2000 ரூபாய் (50000 முதலீடிற்கு )கிடைத்தவுடன் COMPUTER ஐ விட்டு எழுந்து போய்விடுவேன் என்று உங்களில் ஒரே எவராவது இருகிறீர்களா ?

எவருமே இருக்க முடியாது ...இந்த ஒரு விஷயம் இந்த ஒரு விஷயம் தான் உங்களின் முதல் எதிரி ..

இலக்கில்லாமல் உள்ளே வராதீர்கள் வந்தீர்கள் என்றால் உங்கள் பணமும் இலக்கில்லாமல் அழிந்து போய்விடும்...

வெறும் 300 ரூபாய் ஒரு நாளைக்கு கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வந்து இன்று 30 இலட்சம் ரூபாய் கடனில் இருக்கும் நண்பர்களை சந்தித்து இருக்கிறேன்.. இதே கோவையில் 600 பேர் க்கு முதலாளியாக  ஒரு தொழிற்சாலை அதிபர் இன்று அதே தொழிற்சாலையில் வேலைக்கு செல்கிறார்.. அதே போல வெறும் 3500 ரூபாய் சம்பளத்திற்கு (1985 இல் ) வேலைக்கு சென்று கொண்டிருந்த ஒரு நண்பர் சென்னையில். இன்று 600  கோடிக்கும் அதிகமாக சம்பாதித்து இருப்பதும்..இந்த தொழிலினால் ...


எல்லாவற்றிர்க்கும் முதல்  காரணம் இலக்கு இல்லாதது தான்..எதற்காக இந்த தொழிலுக்கு வந்திருக்கிறோம் ??? நம்மிடம் இருக்கும் முதலீட்டிற்கு நாம்  எதிர்பார்க்கும் தொகை எவ்வளவு.. இந்த தொகையை சம்பாதிக்கும் அளவிற்கு நாம் தொழிலை புரிந்து கொண்டிருக்கிறோமா? என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள்...


ஒரே ஒரு விஷயம் ..உங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் இருக்கும் ஒரு சின்ன மளிகை கடையில் போய் விசாரித்து பாருங்கள்...அந்த கடை தொடங்கும் முன் அவர் ஏதேனும் மளிகை கடையில் ஒரு 4 வருடம் அனுபவத்துடன் இருந்திருப்பார் ..இந்த கடையை தொடங்க வேண்டி கட்டிடத்திற்கு ஒரு 1 இலட்சம் ரூபாய் ADVANCE கொடுத்திருப்பார்...மளிகை சரக்கு வாங்க வேண்டி ஒரு 2 இலட்சம் ரூபாயாவது முதலீடு செய்திருப்பார் ..இவ்வளவு முதலீடு செய்து அது போக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  அந்த கடையில் இருந்து வணிகம்  செய்து அன்றைய இலாபத்தை கணகிட்டால் ஒரு 1000 ரூபாய் அல்லது 1500 ரூபாய் அவருக்கு கிடைக்கும்..


இதுவே வேலைக்கு போகும் ஒரு நபரை எடுத்து  கொள்ளுங்கள்..காலை முதல் மாலை வரை 6 நாட்கள் வேலை பார்த்து மாதம் 25 நாட்கள் வேலை பார்த்து அதன் பின் மாத கடைசியில் அவர் கையில் கிடைக்கும் சம்பளம் 30000-40000 வரை மட்டுமே...சராசரி ஒரு நாளைக்கு 1500-2000 ரூபாய் தான் கணக்கீடு வருகிறது..


ஆனால் இந்த தொழிலுக்கு வருபவர்கள் மட்டும்,வரும் போது தினசரி 1000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று இந்த தொழிலுக்கு வருகின்றனர்..ஆனால் வந்த பின் செய்வதோ..எல்லாம் தலைகீழ் ..ஆசை ஆசை இன்னும் பணம் இன்னும் பணம் ..என்று எந்த  இலக்கும் இல்லாமல் தொழிலும் தெரியாமல்..எல்லாவற்றையும் இழந்து,கடன் வாங்கி அதையும் இழந்து கடனாளி ஆகி ,நண்பர்களுக்கு TRADE செய்து தருகிறேன் என்று அதையும் இழந்து..கடன் கடன் கடன் ,,வட்டி வட்டி வட்டி என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம் ..


ஒரு நண்பர் 2 மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார் ..10 இலட்சம் போட்டேன் சார்..3 மாதத்தில் 6 இலட்சம் தான் இருக்கிறது..என்ன செய்ய சார் உங்க CLASS க்கு வரணும் சார்..வந்த பின் தான் TRADE செய்ய போகிறேன்..3 மாதத்தில் 4 இலட்சம் போய்விட்டது சார் என்றார்,,,நானும் கவனமாக TRADE செய்யுங்கள் சார் என்று சொன்னேன் ..அதன் பின் தொடர்பு ஏதும் கொள்ளவில்லை..

திரும்ப சென்ற மாதம் தொலைபேசியில் அழைத்து  சார் 3 இலட்சம் தான் இருக்குது சார் மீத பணம் எல்லாம் போய்  விட்டது சார்.உங்க CLASS க்காவது வந்திருக்கலாம் சார் என்று சொன்னார்..இன்னமும் பேசினார் ..  நேற்று ஒரு நண்பர் சொன்னார் PUT OPTION வாங்க சொல்லி MARKET முடியும் போது 27.50ரூபாய்க்கு 10000 QUANTITY வாங்கினேன்,இப்போ 55 ரூபாய் TRADE ஆகிறது ..நான் என்ன செய்ய விற்று விடவா ?? என்று கேட்டார் .. ஒரு இரவில்2.75 இலட்சம் ரூபாய்க்கு  2.75 இலட்சம் இலாபம்  கண்டிப்பாக BOOK செய்யுங்கள் என்று.. அதற்கு அவர் சொன்ன பதில் இங்கே எல்லாரும் சொல்லுகிறார்கள் இது 90 போகும் என்று..நான் வைத்து பார்க்க போகிறேன் சார் என்று...நான் சொன்னேன் பாதியை விற்று விடுங்கள் உங்கள் முதலீடு தப்பி விடும் மீதியை 90 க்கு போகும் வரை காத்திருங்கள் என்று அவர் சொன்னார் .எல்லாம் 90 போனால் 6.25 இலட்சம் கிடைக்கும்  எனது 10 இலட்சம் இழப்பில் இருந்து மீண்டு வந்து விடுவேன் சார் என்று  கூறினார் ....

அதற்கு மேல் நான் எனது சொல்லவில்லை 40-45 SL மட்டுமாவது  போட்டு விட்டு வணிகம் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு முடித்து விட்டேன்....ஒரு மணிநேரம் கழித்து PH  செய்து நான் SL  30 இல் போட்டேன் SIR அது TRIGGER ஆகிவிட்டது கமிசன் எல்லாம் போக 8000 ரூபாய் மட்டும் கிடைத்து என்று,,,


திரும்ப ஒரு மாதம்  2ஆம் தேதி தொடர்பு கொண்டு 60000 ரூபாய் தான் அக்கௌண்டில் இருக்கிறது..நீங்கள் எப்போ CLASS எடுப்பிற்கள் என்று கேட்டார் ..நான் இப்போது வகுப்பு ஏதும் எடுக்க வில்லை அடுத்த மாதம் EXPIRY முடிந்தவுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன் ...

60000 ரூபாய் இருந்தால் தினசரி ஒரு 1000 ரூபாயாவது சம்பாதிக்க முடியுமா என்று கேட்கிறார்..??

இனிமேல் அவருக்கு கற்று கொடுக்க ஏதும் இல்லை இங்கே அவர் என்னிடம் வந்து பணம் கொடுத்து கற்று கொண்டால் கூட அவருக்கு இழப்பு தான் வரும் ..அவரை பொறுத்த வரை இது ஒரு சூதாட்டம்..அவர் இதை ஒரு தொழிலாகவே மதிக்க வில்லை ..


இது போல தான் நம்மில் பலரும் இருக்கின்றோம்..இந்த தொழிலை ஒரு தொழிலாக எண்ணாமல் 10000-,20000,50000 என்று கடன் வாங்கி  கொண்டு வந்து என்றைக்காவது நாமும் கோடிஸ்வரன் ஆகி விடுவோமா ??? யாராவது (TIPS PROVIDERS ) நம்மை கோடீஸ்வரன் ஆக்கி விடுவார்களா??? என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் ..


இந்த தொழிலில் வெற்றி பெற வேண்டுமானால் ..உங்கள் மனதில் இதை ஒரு தொழிலாக மதியுங்கள்.. 10000-20000 போட்டு விட்டு உங்கள் கோடிஸ்வர கனவினை மார்க்கெட்டில் திணிக்காதிர்கள் ...


அதற்காக 20000 ரூபாய் வைத்து இந்த தொழில் செய்தால் முன்னேற முடியாது என்று சொல்லவில்லை..


ஒரு 25000 ரூபாய் முதலீட்டை சரியான திட்டமிடல் முயற்சி இருந்தால் 11 மாதத்தில் ஒரு கோடியாக மாற்றும் வாய்ப்புகள் உள்ள தொழில் தான் இது..ஆனால் அதற்கு முறையான பயிற்சியும் பொறுமையும் அவசியம்.. பயிற்சி என்பது யாரோ ஒருவரிடமமோ அல்லது எங்களிடமோ வந்து கற்று கொள்ளவதில்லை..உங்களது தீராத ஆர்வத்தினால் மட்டுமே வருவது...அமைதியாக இருந்து ஒரு 6 மாதம் எந்த TRADE உம் செய்யாமல் மார்க்கெட்டில் ஒரு நாள் விடாமல் (9.15--3.30வரை ) வேடிக்கை மற்றும் பாருங்கள் மார்க்கெட் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும்..அதன் பின் நீங்கள் தான் இராஜா இந்த தொழிலுக்கு..


ஒரு சின்ன கதை இங்கே..


இரண்டு மீனவர்கள் இருந்தார்களாம்..அவர்கள் இரண்டு படகுகளில் மீன் பிடிக்க செல்லும்  போது ஒரு தீவில் சற்று இருந்து விட்டு திரும்ப மீன் பிடிப்பார்களாம்..ஒரு நாளும் அந்த தீவின் உள்ளே சென்றது கிடையாதாம்..ஒரு நாள் அப்படி அந்த தீவில் ஓய்வெடுக்கும் போது அங்கே  ஒரு பாறையில் ஒரு MAP பாதை ஓன்று போட்டு இங்கே புதையல் உள்ளது..என்று எழுதி இருந்ததாம்..


அவர்கள் அங்கே அந்த MAP இன் படி போய் உள்ளே போய தேடும் போது வெகு நேர சிரமத்திற்கு பின் மிக பெரிய புதையலை கண்டு பிடித்தார்களாம் ..மிகப்பெரிய என்றால் பெரும் மலையளவு தங்கம்,வைரம் என கொட்டி கிடந்ததாம்..


ஒரு  மீனவன் படகு நிறைய நிரம்பி வழியும் அளவு அள்ளி நிறைத்து கொண்டான்..

மற்றொரு மீனவனோ படகில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தங்கம் ஏற்றி கொடு கிளம்பினான் ..
முதலாவது மீனவன் கேட்டானாம் ஏன்டா உனக்கு இவ்வளவு போதுமா ?? என்று ??
இரண்டாவது மீனவன் சொன்னான் ..எனக்கு இங்கே இருக்கிற எல்லாமே தான் வேணும்.. ஆனால் இதை நாம் மட்டும் தான் பார்த்திருக்கிறோம்..அதனால் தினசரி வந்து கொஞ்சம் கொஞ்சமாவாக எடுத்து கொள்வோம் என்று..

உனக்கு வேண்டுமானால் இதை மட்டும்  எடுத்து கொள். எனக்கு படகு நிறைய வேண்டும் என்று சொல்லி விட்டு முதலாவது மீனவன் அப்படியே வேகமாக கிளம்பினான் ..


திரும்ப இதே படகில் வந்து இன்னொரு  முறை படகு நிறைய வந்து அள்ளி கொண்டு போக வேண்டும் என்று ஆசை பட்ட முதலாவது மீனவன் வேகமாக படகை ஓட்டினான்..


இரண்டாவது மீனவனோ நிதானமாக ஓட்டினான் ..இந்த புதையல் முழுவதும் நம்முடையது தான் என்று நம்பினான்..


சற்று நேரத்தில் வந்த கடல் கொந்தளிப்பில் ,இருவரின் படகும் தடுமாறியது..

இரண்டாவது மீனவனின் படகு குறைவாக  தங்கம் இருந்ததால்,கொஞ்சம் தடுமாறியது..

முதல் மீனவனின் படகு அதிக எடை,அந்த மீனவனின் பதட்டம் என வேகமாக (முழ்கும் அளவிற்கு )ஆடியது...இரண்டாவது மீனவன் முதல் மீனவனை பார்த்து சொன்னான் ,,கொஞ்சம் தங்கத்தை குறைத்து கொள்..படகை முழக்காமல் காப்பாற்றி விடலாம் என்று..


முதல் மீனவன்  சொன்னான் இது  எனக்கானது..நான் இதில் ஒரு கிராம் கூட இழக்க மாட்டேன் என்று,,,

சற்று நேரத்தில் முதல் மீனவன் அதிக எடை காரணமாக படகு கடலில் முழ்கி இறந்து போனான்,,

ஆனால் இரண்டாவது மீனவனோ..அந்த கொஞ்சம் தங்கம் கொண்டு வந்ததால் முழ்காமல் தப்பி வந்து அந்த தங்கத்தை விற்று இன்னும் பெரிய படகு வாங்கி அதை கொண்டு இன்னும் நிறைய தங்கம் கொண்டு வந்து அதை விற்று பெரிய கப்பல் வாங்கி அந்த தீவின் முழு தங்கத்தையும் கொண்டு வந்து கோடீஸ்வரன் ஆகிவிட்டான் ..


இங்கே இந்த தீவு என்பது பங்கு சந்தை..இங்கே மலை போல் பணம் கொட்டி கிடக்கிறது..தெரிந்தோ தெரியாமலோ இங்கே நீங்கள் வந்து விட்டர்கள்..

அந்த படகு என்பது உங்களது முதலீடு ..நீங்கள் எடுத்து கொண்டு போகும் தங்கம் என்பது உங்களது இலாபம்.உங்கள் முதலீடிற்கு ஏற்ற அளவு இலாபம் கொண்டு போன இரண்டாவது படகை போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து கொண்டு அவர்கள் முதலீட்டை பெருக்கி இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர்..இவர்கள் ஒரு சிலரே..

முதலீட்டை விட அதிக இலாபம் கொண்டு வர நினைத்த முதலாம் மீனவனை போல தான் இங்கே நிறைய பேர் 10000 முதலீட்டில் தினமும் 2000-3000 வேண்டும் என்று நினைக்கிறோம் ..அது சில சமயம் கிடைக்கவும் செய்கிறது ..ஆனால் மார்க்கெட் கொந்தளிக்கும் தருணங்களில் கொஞ்சம் இழப்பு வந்தால் கூட  நமது இலாபத்தை கொஞ்சம் கூட இழந்து போக கூடாது என்று நினைத்து  மொத்த படகையும் (முதலீட்டையும் ) இழந்து போனவர்கள் தான் ஏராளம்...


இந்த மீனவர்களில் நீங்கள் யாராக இருக்க போகிறீர்கள் ???

தயவு செய்து கற்று கொள்ள முயற்சி செய்யுங்கள்..
யாரிடமும் (எங்களிடம் கூட)பணம் கொடுத்து கற்று கொள்ள வேண்டாம்..
பொறுமையாக ஒரு 6 மாதங்கள் மார்க்கெட்டை பார்த்து கொண்டிருந்தால் போதும் உங்களுக்கே மார்க்கெட் புரிய ஆரம்பிக்கும் ..உங்களுக்கே இங்கே நடக்கும் ஏமாற்று வேலைகள் புரிய ஆரம்பிக்கும்...
அதன் பின் இங்கே ஜெயிக்க முடியுமா என்று யோசித்து பாருங்கள் அதன் பின் நம்பிக்கை இருந்தால் ஓரளவு பணத்தோடு இங்கே வாருங்கள்..உங்களால் ஜெயிக்க முடியும்..

உங்கள் மனசாட்சிக்கு ஒரு கேள்வி ??? நீங்கள் TRADING இல் திரும்ப திரும்ப பணத்தை கொண்டு வந்து போடும் போது உங்கள் மனதில் ஒரே ஒரு முறையாவது "இந்த பணமும் போய்விட்டால் என்ன செய்வது" என்ற எண்ணாமல் இல்லாமல் என்றைக்காவது இங்கே பணம் முதலீடு செய்திருக்கிரிங்களா???

இப்படி நினைதிருண்டீர்கள் என்றால் நீங்கள் தொழிலுக்கு வரவில்லை சூதாட வருகிறிர்கள்.என்று நீங்களே முடிவு செய்து விடலாம்...

இந்த பங்குசந்தை தொழிலில் நடப்பது பெரும்பாலும் திட்டமிடப்பட்ட வணிகம் ஒன்றே..எல்லா TRADE உம் இங்கே திட்டமிட்டே நடக்கின்றன...மிக பெரிய கூட்டம் ஓன்று இங்கே பெரும் பணத்தை கொண்டு போய் கொண்டு இருக்கின்றன..


சந்தேகம் இருந்தால் யோசித்து பாருங்கள் நேற்று முன் தினம் NIFTY 8400,BANK NIFTY 18500 இல் முடிந்தது..எவ்வளவு துல்லியமாக அந்த விலையில் வந்து NIFTY யை யை BANK NIFTY யை கொண்டு வந்து நிறுத்த முடியுமா..எல்லாமே இங்கே திட்டம் தான் ..அன்றைய கணக்கீடு என்ன என்றால் ..8400 CALL 8400 PUT ,18500 CALL 18500 PUT என அன்று முடியும் போது 000ZERO வாக முடிக்க வேண்டும் என்பது அன்று போடப்பட்ட திட்டம்...அது ஓரளவு முன்னரே கணிக்க முடிந்ததால் தான்  8395 இல் EXIT AND STAY AWAY என்று அன்று FB இல் UPDATE செய்தோம்..அது 8433 வரை சென்றது திரும்ப 8400 இல் வந்து முடிந்தது..அது அன்று 8450 வரை சென்று இருந்தால் கூட முடியும் போது 8400 இல் தான் முடிந்திருக்கும்...அது தான் திட்டமிடப்பட்டு அது தான் நடந்தது..இங்கே ஒரு வேளை வியாபாரம் நடந்திருந்தால் ஒரு 10 புள்ளிகள் அதிகமாகவோ குறைவாகவோ மார்க்கெட் முடிந்திருக்கலாமே ???? கடைசி 20 நிமிடமும் இப்படி தான் TRADE ஆகியது...இப்படி தான் இங்கே எல்லாமுமே...


இன்னும் நிறைய நிறைய இருக்கிறது உதாரணங்கள் ..அதை எழுத்தில் விளக்க முடியாது..எழுதினால் இன்னும் 200 பக்கம் எழுத வேண்டியது இருக்கும்..


இங்கே தொழில் என்ற மரியாதையோடு ..கவனமாக இருந்தால் பணம் சம்பாதிக்க முடியும் ..அதுவும் உங்கள் முதலீடிற்கு ஏற்ற வருமானம் மட்டுமே...மற்ற படி இங்கே இதை விட நல்ல தொழில்களும் உள்ளன..பங்கு சந்தையில் உள்ள 4000 COMPANY களும் 4000 தொழிலை தான் செய்கின்றன ..இந்த COMPANY கள் இங்கு வந்து அவர்கள் SHARE ஐ பட்டியலிட்டு இருகின்றன..அவ்வளவு தான் அவர்கள் வேறு தொழிலை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் .. எல்லோரும் இங்கே TRADE  செய்யவில்லை...                                                                    


 இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ...உங்களால் இந்த பங்குசந்தையில் ஜெயிக்க முடியுமா..???..கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் இங்கே இருங்கள்.. இல்லை என்றால் ...நாளையே உங்கள் ACCOUNT இல் இருக்கும் மீதமுள்ள பணத்தையாவது PAYOUT போட்டு அதை எடுத்து முழுமையாக உங்கள் குடும்பத்தினருடன் அனுபவித்து செலவழியுங்கள் ....அதன் பின் வேறு தொழிலுக்கு மாறி விடுங்கள்...எல்லா தொழிலிலும்   பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன...


நீங்கள்  தான் கற்று கொள்ளவும் பொறுமை மனது இல்லாமல் 20000,30000 என்று எங்குகெங்கோ உழைத்து இங்கு வந்து தொலைத்து  கொண்டு இருக்கிறார்கள்..


உங்களுக்கும் எனக்கும்உள்ள ஒரே ஒரு உறவு  FACEBOOK ம் தமிழும் மட்டுமே... என்  தமிழ் சகோதரர் ஒருவர் கூட தம் பணத்தை இழந்து விட கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுரை ..தவிர இந்த தொழில் மீதான உங்கள் நம்பிக்கையை குறைப்பதற்காக இல்லை...


தோழமையுடன்

ZFORMULA RAVI