Friday 8 May 2015

இன்னும் எவ்வளவு நாட்கள் இந்த பங்குசந்தையில் பணத்தை இழக்க போகிறிர்கள்.???

பங்குசந்தை தேவைக்கும் அளிப்புக்கும் (DEMAND AND SUPPLY )என்ற வணிக நிலையில் இருந்து மாறி,பணம் படைத்தவர்களின் சூதாட்ட களம் போல் மாறி வெகு நாளாக ஆகிறது.. 

சென்ற வாரத்தில் NIFTY திங்கள்கிழமை 160 புள்ளிகள் உயர்ந்தது ,செவ்வாய்கிழமை -11 புள்ளிகள் குறைவாக முடிந்தது புதன்கிழமை -237 புள்ளிகள் குறைவாக முடிந்தது..வியாழக்கிழமை -39 புள்ளிகளில் முடிந்தது ..வெள்ளிகிழமை +134 புள்ளிகளில் முடிந்துள்ளது.மொத்ததில் சென்ற வாரத்தை விட 10 புள்ளிகள் (NIFTY SPOT) அதிகமாக வந்து முடிந்துள்ளது..ஆனால் இந்த ஏற்ற இறக்கத்தில் நீங்கள் இழந்த பணம் எவ்வளவு ?????....

என்னிடம் FB இல் நண்பர்களாக இருக்கும் ஒரு 6-7 நண்பர்களின் (என்னுடன் பகிர்ந்து கொண்ட )இழப்பு மட்டும் 5.25 இலட்சங்களுக்கு மேல்..எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக வேறு எங்கோ இருந்து நாள் முழுக்க வேலை செய்து சேர்த்து வைத்த பணம்..

ஏன் இப்படி எதுவும் தெரியாமல் இங்குவந்து பணத்தை இழந்து வருகிர்கள்????
எதுவும் தெரியாமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று TRADE செய்யாமல், இந்த தொழிலை விட்டு தயவு செய்து வெளியே சென்று விடுங்கள்..உங்கள் குடும்பம் உங்கள் வருங்கால உழைப்பாவது மீதம் இருக்கும்..

இங்கே நடப்பது முழுக்க முழுக்க பணம் படைத்தவர்களிடையே நடக்கும் விளையாட்டு..அவர்களின் நோக்கம் முழுவதும் உங்களுடைய பணம் தான் .. 
உங்களது TECHNICAL ANALYST திறமை எல்லாம் இந்த சந்தைக்கு மிக சாதாரணம்..எல்லாவற்றையும் நொறுக்கி தள்ளிவிட்டு உங்கள் பணத்தை கொண்டு போய்விடும்...

சின்ன உதாரணம் இங்கே ஒரு DAILY CHART UPDATE செய்துள்ளேன்..பாருங்கள் மே முதல் வாரம் ,ஜனவரி முதல் வாரம் இரண்டையும் வட்டமிட்டு காட்டியுள்ளேன் பாருங்கள் ..இந்த இரண்டு வார CANDLE களுக்கும் உள்ள ஒற்றுமையை..
இங்கு எல்லாமே திட்டமிட்டு நடக்கிறது..எந்த ஒரு ஏற்றத்திற்கும், இறக்கத்திற்கும் பலபல காரணங்கள் சொல்லுவார்கள்..சென்ற வார இறக்கத்திற்கும் பற்பல காரணங்கள் சொன்னார்கள்..ஆனால் எங்களுக்கு(எனது மாணவர்களுக்கும் ) தெரியும் இந்த இறக்கத்திற்கு உண்மையான காரணம் என்னவென்று...  
உண்மையான காரணம் புரிந்த நாங்கள் இந்த வீழ்ச்சியில் இருந்து எங்களது முதலீட்டை காத்து கொண்டோம்..

 உங்கள் பணத்தை கொண்டு  போக இங்கே நடப்பது மிகப்பெரிய பணம் படைத்த கூட்டம் திட்டமிடுகிறது ..அவர்களின் கூடவே சென்றால்,நாமும் பணம் சம்பாதிக்கலாம் ,நமது முதலீட்டையாவது இழப்பில்லாமல் காத்து கொள்ளலாம்...

தயவு செய்து திரும்பவும் சொல்லுகிறேன்..இங்கே உங்கள் முன் இருப்பது கண்ணுக்கு தெரியாத எதிரி அவனது பலம் அசூர பலம் ..அவர்களோடு மோத மிக  அதிகபட்ச திறமை...
 அந்த திறமை இல்லாத நண்பர்கள் தயவு செய்து மீதம் இருக்கும் உங்கள் பணத்தையாவது  பாதுகாத்து கொள்ளுங்கள்..."சந்தையை விட்டு போய்விடுங்கள்"..இந்த வார்த்தையை சொல்ல வருத்தமாக தான் இருக்கிறது ..வேறு வழியில்லை ஒவ்வொரு நண்பர்களும் தொலைபேசியில் நான் இவ்வளவு இழந்து விட்டேன் இவ்வளவு போய்விட்டது என்று கதறும் போது வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை..
இந்த பதிவையும் பகிர்ந்து உங்கள் நண்பரின் பணத்தையும் காக்கவும் 
Zformula Ravi